தென்காசியில் நூதன முறையில் ரூ.38 லட்சம் மோசடி செய்த அமமுக நிர்வாகி

தென்காசியில் அமமுக நிர்வாகி ஒருவர் நூதன முறையில் 38 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நடுபேட்டையை சேர்ந்த அமமுக மாவட்ட இணைச் செயலாளர் சிக்கந்தர் நியாஸ். அவர் ஆயிரப்பேரியை சேர்ந்த சிவாஜியிடம் பழைய நகையை புதிய நகையாக மாற்றி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். சிவாஜியிடமிருந்து சிறு சிறு தொகையாக 38 லட்ச ரூபாய் வரை அவர் பெற்றுள்ளார். தனது பணத்தை திருப்பி கேட்ட சிவாஜியை சிக்கந்தர் நியாஸ் அலைக்கழித்தாக கூறப்படுகிறது. தான் ஏமாந்ததை அறிந்த சிவாஜி, பண மோசடியில் ஈடுபட்ட அமமுக நிர்வாகியை கைது செய்ய கோரி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version