நாட்டரசன் கோட்டை அருகே ஆதி கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில் ஆடி உற்சவ விழா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே, ஆதி கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடி உற்சவ விழா நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையை அடுத்த பிரண்டை குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஆடி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கி விழாவில் மூலவர் ஸ்ரீ ஆதி கண்ணுடைய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பெண்கள் நவதானியம் கொண்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து, மங்கல வாத்தியங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திகடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆதி கண்ணுடைய நாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.

Exit mobile version