குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய திறக்கப்பட்ட அம்மா பூங்கா

தாளவாடியில் குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய அம்மா பூங்கா திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள குழந்தைகள் உடற்பயிற்சி செய்யவும், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் பூங்கா அமைத்து தர பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அம்மா பூங்கா அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் அங்குள்ள சிறுவர், சிறுமியர் பூங்காவில் மகிழ்ச்சியுடன் விளையாட்டு பயிற்சி செய்து வருகின்றனர். எனவே அம்மா பூங்காவை அமைத்துத் தந்த தமிழக அரசிற்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version