யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி -எஸ்.பி.வேலுமணி

யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அம்மா ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அம்மா ஐஏஎஸ் பயிற்சி மையம் திறக்கப்பட்டது. இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யு.பி.எஸ்.சி. முதல் நிலை நுழைவு தேர்வுக்கு, விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுவதாக கூறினார். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர் வேலுமணி, அடுத்த மாதம் நடைபெறும் நுழைவு தேர்வுக்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version