நக்சல் இல்லாத சத்தீஸ்கரை உருவாக்குவதே இலக்கு – அமித்ஷா

நக்சல் இல்லாத சத்தீஸ்கரை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா மற்றும் அம்மாநில முதலமைச்சர் ராமன் சிங் ஆகியோர் ராய்ப்பூரில் கூட்டாக வெளியிட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, தாங்கள் ஏழைகளுக்காக உழைத்து வருவதாக கூறினார். நக்சல் இல்லாத சத்தீஸ்கரை உருவாக்குவதே பா.ஜ.கவின் இலக்கு என சூளுரைத்த அவர், சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் சத்தீஸ்கர் மக்களுக்கு தரமான உயர் கல்வி வழங்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

 

 

Exit mobile version