அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோயில் கட்டுவதே விருப்பம்: அமித்ஷா

அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோவில் கட்ட விரும்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தினால் 10 நாட்களில் வழக்கு முடிந்து விடும் எனவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மேல் முறையீட்டு வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வரும் ஜனவரி மாதம் விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் தீவிரமாக எடுத்துள்ளது. இதற்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை விரும்புவதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.

Exit mobile version