முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசிய அமித்ஷா!

புரெவி புயல் தமிழ்நாட்டில் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

அப்போது, புரெவி புயலின் தீவிரம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் முதலமைச்சர் எடுத்துரைத்தார். இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். புரெவி புயல் இரவு கரையை கடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடனும் அமித்ஷா தொலைபேசியில் பேசினார்.

Exit mobile version