ஏழை கூட நாட்டின் பிரதமராக வரமுடியும் என்பதற்கு மோடி உதாரணம்: அமித் ஷா

டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது, கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் பிரதமராக வரமுடியும் என்பதற்கு நரேந்திர மோடி உதாரணமாக இருப்பதாக தெரிவித்தார்.

குஜராத்தின் வளர்ச்சியை உணர்ந்த மக்கள், பிரதமர் மீது நம்பிக்கை வைத்ததாக சுட்டிக்காட்டினார். பா.ஜ.க. ஆட்சியில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு திட்டத்தால் பலனடைந்ததாக குறிப்பிட்ட அவர், கடந்த 5 ஆண்டு நடைபெற்ற நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு அமித் ஷா இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

பிரதமராக பதவி வகித்த 5 ஆண்டுகளில், மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் உழைத்தார் என்றும் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version