அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவிற்கு பல்வேறு கட்சியினர், மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அம்பேத்கர் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாதுரை மற்றும் 30க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, நேரில் சந்தித்து அதற்கான கடிதத்தை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பேசிய அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை, அதிமுக ஆட்சியில் தான் பட்டியல் சமூக மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்ததாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனைப் படைக்கும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version