50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அரசு உயர் நிலைப்பள்ளியில், 10ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள வேட்டவலம் அரசு பள்ளியில், 1968-69 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இந்த விழாவில் கலந்து கொண்டார். 50 ஆண்டுகளுக்கு பின் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்தித்து, அவர்களின் நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இணைந்து, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள், தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.

Exit mobile version