அனைத்துத் தொழிற்சாலைகளிலும் இரவில் பெண்கள் பணியாற்ற அனுமதி : கர்நாடக அரசு

அனைத்துத் தொழிற்சாலைகளிலும் இரவுப் பணியில் பெண்கள் பணியாற்றக் கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்கள் இரவில் பணிபுரிய ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் இரவு நேரத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அனைத்துத் தொழிற்சாலைகளிலும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையிலான பணிநேரத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதி அளித்து அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அரசு வகுத்துள்ள புதிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பணியமர்த்திக் கொள்ளலாம் எனவும், இரவில் பணிபுரிய வேண்டும் எனப் பெண்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரவு நேரத்தில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்ற பின்னரே அவர்களை இரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version