ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் போராட்டங்களுக்கு அனுமதி: அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐய்யரின் 166-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக போன்று ஓடி ஒளியும் கட்சி அல்ல என்றும், தினமும் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் கூறினார்.

Exit mobile version