ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடைய ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் தொடர்பு முழுமையாக இருக்கிறது என்றும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 15 நாட்கள் கோரிக்கையை நிராகரித்து, அவரிடம் 7 நாட்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி வழங்கியது. வரும் 14-ம் தேதி சிதம்பரத்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version