கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் மற்றும் நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை மற்றும் வெள்ளத்தால், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள இளமையாக்கினார் கோயில் குளம் சேதமடைந்ததை குறிப்பிட்டுள்ளார். பொதுக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, 2 கோடியே 62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கோயில் குளம் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கனமழை மற்றும் வெள்ளத்தால், நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்ததை குறிப்பிட்டுள்ள அவர், இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று, நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச் சுவர் 5 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து தரப்படும் என அறிவித்துள்ளார்.

 

Exit mobile version