தேமுதிக உடனான கூட்டணி உறுதியாக உள்ளது -அமைச்சர் ஜெயக்குமார்

தேமுதிக உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் இயக்கமாக அதிமுக உள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

46வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நிறைவு விழா சென்னை தீவுத்திடலில் நடந்தது. இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, அறநிலையத்துறை, நெடுஞ்சாலை துறைகளுக்கு மாநில அரசின் சார்பில் பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும்  இயக்கமாக அதிமுக உள்ளதாகவும், திமுக போன்று கூட்டணிகளை உதாசீனப்படுத்தும் கட்சி இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தேமுதிக உடனான கூட்டணி உறுதியாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.

Exit mobile version