ஒத்த கருத்துக்கள் உடைய கட்சிகளுடன் கூட்டணி – கமல்ஹாசன்

ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் கூட்டணி சேர்வோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் கூட்டணி சேர கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version