தீபிகா படுகோனுக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பா? – மேலாளருக்கு விசாரணை அழைப்பாணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவரது காதலி ரியா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, சுஷாந்த்துடன் சேர்ந்து கஞ்சா புகைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, போதைப் பொருள் விவகாரத்தில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகை தீபிகா படுகோனும் இவ்விவகாரத்தில் சிக்கியுள்ளார். நடிகை ரியாவின் மேலாளர் ஜெயா சஹாவின் வாட்ஸ் அப் குழுவில், போதைப் பொருள் குறித்து கடந்த 2017ம் ஆண்டு தீபிகா சாட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீபிகாவின் மேலாளர் கரீஷ்மா பிரகாஷூக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version