இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்: கே.எல்.ராகுல்

விக்கெட் கீப்பராக பணியாற்றுவது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இதெல்லாம் தனக்கு சர்வ சாதாரணம் என இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டி20 போட்டியில் கே.எல்.ராகுல் கீப்பிங் பணியை மேற்கொண்டார். மேலும் தற்சமயம் அவர் எந்த வரிசையில் களமிறங்கினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான் உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்துள்ளதால் இது எனக்கு கடினமாக இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் நீண்ட நாட்களாக அணியில் விளையாடி வந்தாலும் களத்தில் நிற்க போதுமான நேரம் கிடைக்கவில்லை எனவும், தற்போது அதற்கான நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கே.எல்.ராகுலின் ஆட்டத்திறன் இந்திய அணிக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version