பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்ற உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பிய, நக்கீரன் கோபால், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் மீது சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற நீதிபதி பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

Exit mobile version