அனைத்து குலாளர் மக்கள் இயக்கம், திருநீலக்கண்டர் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே, இவ்விரு சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மண்பாண்ட தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள அனைத்து குலாளர்கள் இயக்கத்திற்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துவரும் அதிமுக அரசுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், வரும் மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பது, அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பானது உள்ளிட்ட தீர்மானங்கள், இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.