கரூரில் அதிமுகவில் இனைந்த திமுக மற்றும் அமமுகவினர்

கரூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திமுக மற்றும் அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சணப்பிரட்டி மற்றும் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கரூர் திமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிக இளைஞர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரியான முடிவை தேர்ந்தெடுத்து அனைவரும் அதிமுகவில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Exit mobile version