கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நாளை திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கடைகளில் ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில்கள் என பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க குழந்தைகளின் பெற்றோர் குவிந்துள்ளனர்

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படும் என அரசு தெரிவித்தது. இந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், அரியலூரில் உள்ள கடைகளில் குழந்தைகளை கவரும் வண்ணம் பல விதமான கல்வி உபகரண பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பெற்றோர்கள் வாங்கி வருகின்றனர். பென்சில்கள், வாட்டர் பாட்டில்கள், ஸ்கூல் பேக்குகள் உள்ளிட்டவை புது மாடல்களில் புதுவரவாக வந்து இருப்பது பள்ளிக் குழந்தைகளை கவர்ந்து வருகிறது

Exit mobile version