மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையடுத்து, தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்துகட்சி தலைவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version