டெல்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்

காஷ்மீர் தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த, டெல்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்துகட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தானிற்கு எதிராக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version