நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு நடைப்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் முப்பதுக்கு மேற்பட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்நிலையில் கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி நடத்தினார். நாடாளுமன்றத்தின் நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் லோக் ஜனசக்தி, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், சட்டமசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைக்பு அளிக்கவும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

Exit mobile version