நாடு முழுவதும் இன்று 150வது காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று, 150வது காந்தி ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

150வது காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி, இன்று காலை 7 மணியளவில் டெல்லி ராஜ்கோட்டிலுள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, வியகாட்டிலுள்ள லால் பகதூர் சாஸ்த்ரியின் நினைவிடத்திலும் செலுத்துகிறார். பின்னர் குஜராத் செல்லும் பிரதமர் மோடி, அகமதாபாத்திலுள்ள காந்தி அசிரமத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.

இதனிடையே 150வது காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காந்திக்கு புகழாரம் தெரிவித்தார். தீண்டாமையை நீக்குதல், வகுப்புவாத ஒற்றுமை, கல்வி, சுகாதாரம் என நாட்டு மக்களை நற்பாதையில் வழிநடத்திய தலைவர் மகாத்மா காந்தி என்று கூறினார்.

Exit mobile version