தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வு

தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்தாயிரத்து 300 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பீர் விலை 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற மதுபானங்களின் விலை அளவுக்கேற்ப 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாயாக மூவாயிரத்து நூறு கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version