வரும்  16ந் தேதி டெல்லி அனைத்து எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்பாரதிய ஐனதா கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி வரும் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து எதிர் கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று சரத்யாதவ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் நாட்டு மக்களை காப்பாற்றவும் தேவையான முக்கிய விஷயங்கள் விவாதிப்பதற்குஇந்த சந்திப்பு வாய்ப்பாக அமைய உள்ளதாகவும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Exit mobile version