இந்தியர்கள் அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க வாருங்கள்…

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தியர்கள் அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி டிவிட் செய்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தல் வரலாற்றில் திருப்பு முனையாக அமையும் என்று தெரிவித்துள்ள அவர் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் சுமார் ஒன்றரை கோடி வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version