கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி

கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவங்கியது.

கோவை வ.ஊ.சி மைதானத்தில் ஆண்களுக்கான 54வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையும், 18வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ பம்பு கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவங்கியுள்ளது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான போட்டியில் புது டெல்லி, இந்திய விமான படை, சென்னை இந்தியன் வங்கி உள்ளிட்ட 8 அணிகளும், பெண்களுக்கான கொல்கத்தா கிழக்கு ரயில்வே, கேரளா மின்சார வாரியம், சென்னை அரைஸ் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்றன.

Exit mobile version