சிலம்பபோட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் .

3 மாநிலங்களை சேர்ந்த 23 அணிகள் கலந்து கொண்ட அகில இந்திய சிலம்பாட்ட போட்டி ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சிலம்பாட்ட குழுவினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த வீரர்கள், கோப்பைகள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Exit mobile version