தமிழ்நாட்டில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்த வேண்டும்

தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து கல்லூரிகளின் பதிவாளர்களுக்கு, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத் தேர்வுகள் அனைத்தும், ஆன்லைனில் மட்டும் நடத்தப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோன்று, அனைத்து தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களும் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version