தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குளிர் நிலவும்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவியதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரிரு இடங்களில் உறைப்பனி நீடிக்கும் என்றும் பிற மாவட்டங்களை பொறுத்தவரை காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பகுதி நேர மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version