மலைப்பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் ஏராளமான மான் ,சிறுத்தை , யானை போன்ற பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் ஒற்றை யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பாச்சலூர் மலைப்பகுதியான வடகாடு பகுதியில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version