அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பெயர்களை சுற்றுலாத்துறை அலுவலக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை, அலங்காநல்லூரில் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று தினங்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதை காண்பதற்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பார்க்க வருகை தரும் சுற்றுலா பயணிகள், தங்கள் பெயர், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட்டு நகலை கொடுத்து, சுற்றுலா துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version