அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் காரை பரிசாக வழங்கினர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு காரும், வெற்றிபெற்ற காளையின் உரிமையாளருக்கு துணை முதலமைச்சர் சார்பில் ஒரு காரும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரை பரிசாக வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார் சாவியினை முதலமைச்சர் ரஞ்சித் குமாரிடம் வழங்கினார். இதே போல், சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சென்னியம்மன் கோயில் காளையின் உரிமையாளருக்கு கார் சாவியினை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கினார்.

Exit mobile version