சினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி!!!

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சினிமா ஊழியர்களுக்கு உதவும் வகையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 51 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சினிமா துறையில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சினிமா தொழிலாளர் கூட்டமைப்புக்கு, நடிகர் அஜய் தேவ்கன் 51 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Exit mobile version