கிரிக்கெட்டிலிருந்து, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் ஓய்வு

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அஜந்தா மெண்டிஸ் 19 டெஸ்ட், 87 ஒருநாள் போட்டி மற்றும் 39 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்டில் 70 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 152 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 66 விக்கெட்டுகளும் என சர்வதேச அரங்கில் 288 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை விரைவாக சாய்த்தவர் என்ற பெருமையை அஜந்தா மெண்டிஸ் பெற்றுள்ளார். டி20 போட்டியில் இரண்டு முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் தக்க வைத்துள்ளார். 2015ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாட இடம் அளிக்கப்படாததால் தற்போது தனது ஓய்வினை அஜந்தா மெண்டிஸ் அறிவித்துள்ளார்.

Exit mobile version