மதுரை விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை விமான நிலையத்திற்கும், ரயில் நிலையத்திற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்ததாகவும், அந்த தகவலை தங்களுக்கு தெரிவிப்பதாகவும் ராஜேஷ் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி, வெடிகுண்டு தடுப்பு மற்றும் மீட்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் என தெரியவந்ததை அடுத்து தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தவரை தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் மதுரை விமான நிலையத்திற்கு 2 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version