பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு

கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

சென்னையில் அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து வரவேண்டிய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க முடிவியவில்லை என்பதால் 5 விமானங்கள் ஐதராபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.  பனி மூட்டம் காரணமாக காலை முதல் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version