வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு -இன்று முதல் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, டெல்டா பகுதியில் இருந்து சென்னை வரை மழை பெய்யும் என்றும் நாளை இந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் சென்னை கடலோரப் பகுதிக்கு வரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளதாகவும் அப்போது, வட தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Exit mobile version