"முந்தைய அதிமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் முன்வைக்க கூடாது" – அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி

முந்தைய அதிமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் முன்வைக்க கூடாது என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் காந்தி, முந்தைய அதிமுக அரசு மீது, தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முந்தைய அதிமுக அரசு மீது அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, முந்தைய அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் சட்டப்பேரவையில் முன்வைக்கக்கூடாது என்றார்.

இதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினர். இருப்பினும், அதிமுக எம்எல்ஏக்களின் எதிர்ப்பை பொறுட்படுத்தாமல் திமுக அமைச்சர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, முந்தைய அரசு மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதை தவிர்த்து, அவையை ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version