அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி ரோஜா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் வீட்டில் இருந்த நிலையில் அவர்களை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்ட சொகுசு காரையும் மர்மநபர்கள் கடத்திச்சென்றனர். கடத்தலின்போது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவையும் மர்மநபர்கள் சேதப்படுத்திச்சென்றதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷிபாஷ் கல்யாண், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி டிஎஸ்பி ஜெகதீஷ் நாயக் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

Exit mobile version