அதிமுக சார்பாக கேரள மக்களுக்கு திருவோணத் திருவிழா வாழ்த்து

திருவோண திருவிழாவை முன்னிட்டு, கேரள மக்களுக்கு, அதிமுக சார்பாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருஓண திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு, ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும், அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை அனைவரும் அறியும் வகையில் கொண்டாடப்படும் திருஓணத் திருவிழாவுக்கு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா வழியில் இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளனர். 

 

Exit mobile version