பூந்தமல்லி தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெறும்- மா.பா.பாண்டியராஜன்

 

பூந்தமல்லி தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க. தான் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்து அவர் பேசும்போது, ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழந்ததாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சுட்டிக்காட்டினார்.

 

Exit mobile version