தமிழக மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கே அதிமுக ஆதரவளிக்கும்

தமிழக மக்களுக்கு நல்லது செய்பவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் விழா சென்னையில் நடைபெற்றது.

முதலமைச்சர் பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில், பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 1000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்வார்களோ, அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார். அவர்களை அதிமுக ஆதரிக்கும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு திமுகவினரே காரணம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Exit mobile version