”திமுக அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அதிமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வரும்”

காட்பாடி சட்டமன்ற தொகுதியில், திமுக அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதிமுக வேட்பாளருக்கு சாதகமான தீர்ப்பு வரும் என, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே, சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், காட்பாடியில் தபால் ஓட்டுகள் அனைத்திலும், ஒரே அதிகாரியிடம் கையெப்பம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

திமுக அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து, மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில், நிச்சயம் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று அவர் கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளாக மின்மிகை மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு, தற்போது இருளில் தத்தளிப்பதாகவும், அதற்கு ஆளும் திமுக அரசு, அதிமுக மீது வேண்டுமென்றே பழிச்சொல் கூறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version