கர்நாடக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழத்துக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் நடவடிக்கைகள், தமிழகத்தில் எதிர்பலையை ஏற்படுத்தி வருகிறது. அணை கட்டுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மேகேதாட்டுவில் திரண்ட 100க்கும் மேற்பட்டோர், கர்நாடக அரசை கண்டித்து கையில் பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கர்நாடக காவல் துறையினர் போராட்டக்காரர்களை வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version