ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

முதலமைச்சர் குறித்து அநாகரிகமான முறையில் பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தரம்தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், பள்ளிகொண்டா பேருந்து நிலையத்தில், ஆ.ராசாவைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Exit mobile version