இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி: தொண்டர்கள் கொண்டாட்டம்

தமிழக சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, உற்சாகமடைந்த தொண்டர்கள் தலைமைக் கழகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களை கைப்பற்றியது. இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பின்னர், மறைந்த ஜெயலலிதாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Exit mobile version